×

கரூரில் பாஜக திமுகவினர் வாக்குவாதம்

கரூர்: கரூரில் ஜூலை 1ம் தேதி பாஜக சார்பில் கரூர் மாற்றத்திற்கான மாநாடு மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பந்தல் அமைப்பதற்கான கால்கோள் விழா இன்று(29ம் தேதி) மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன், முன்னாள் எம்பி ராமலிஙகம் தலைமையில் நடைபெறுகிறது. இதற்காக பந்தல் அமைப்பதற்கான பொருட்கள், உபகரணங்களை திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று இரவு 10 மணியளவில் கொண்டு வந்து இறக்கினர்.1ம் தேதி தான் மாநாட்டிற்கு அனுமதி அதற்கு முன்னதாக பந்தல் பொருட்களை எப்படி கொண்டு வரலாம் என மாநகராட்சி அதிகாரிகள் பாஜகவினரிடம் கேள்வி எழுப்பினர். இத்தகவலறிந்து அங்கு வந்த திமுகவினர் பாஜகவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கரூர் ஏடிஎஸ்பி மோகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கரூர் ஏடிஎஸ்பி மோகன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post கரூரில் பாஜக திமுகவினர் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : bajaka ,karur ,KAROURE ,Anamalai ,Dinakaran ,
× RELATED கரூர் ஜவஹர் பஜார் பகுதியில்...